Friday, March 29, 2024
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சியில் கொலை ; கொழும்பில் பதுங்கியவரை தட்டித்தூக்கிய பொலிஸார்!

கிளிநொச்சியில் கொலை ; கொழும்பில் பதுங்கியவரை தட்டித்தூக்கிய பொலிஸார்!

கிளிநொச்சி டிப்போ சந்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டக்கச்சி – கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் ஜெயகரன் (வயது 33) என்பவர் மது போதையில் நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த் தகராறில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.

இந்த நிலையில், கொழும்பு-13 பகுதியில் தேடப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட விசேட குற்றத்தடுப்பு (இரணைமடு) பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாரதிபுரம் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments