கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இன்று விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையானது கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இன்று இரண்டாவது நாள் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் நாளை விசாரணை நடத்தப்படும் எனவும். இன்று 60 பேர் வரை விசாரணைக்கு பங்களித்துள்ளனர் எகவும் தகவல் தெரிவித்துள்ளனர்..
இந்நிலையில், கடந்த 2000 ஆண்டுகளுக்கு பிறகு காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் ஆதாரங்களுடன் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.