Friday, April 19, 2024
Homeஇந்திய செய்திகள்காதல் திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு..!

காதல் திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியில் விக்னேஷ் – (20) தம்பதியினர் வசித்து வந்தனர். விக்னேஷ் சரக்கு ஆட்டோ டிரைவர். பி.எஸ்சி. நர்சிங் படித்த துர்கா, பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மகளை காணவில்லை என துர்காவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, துர்கா-விக்னேஷ் காதல் ஜோடி திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து துர்காவின் பெற்றோரை அழைத்து போலீசார் அனுப்பி வைத்தனர். அதன்பின், திருப்புவனத்தில் கணவருடன் குடும்பம் நடத்தி வந்த துர்கா, பல மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இதனிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள தொடங்கினார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த உறவினர்கள் சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக துர்காவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே துர்கா பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் கும்பகோணம் ஆர்.டி.ஓ. அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments