காதலித்த கணவர் விபத்தில் உயிரிழந்த மறுநாளே அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்த பாலாஜி (22), கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷிதா (20) என்பவரை காதலித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாலாஜி தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலை சக்கரத்தின் அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பாலாஜியின் இறுதி சடங்குகள் முடிந்த நிலையில், ரஷிதா மட்டும் சோகத்தில் கதறி அழுதார்.
நேற்று காலை இவரது அறையின் கதவு நீண்ட நேரமாக திறந்து கிடந்தது. சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரஷிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.