Friday, March 29, 2024
Homeஉலக செய்திகள்காதலி பிரிந்த கோவத்தில் அப்பாவி மக்களை கொலை செய்த காவலர்!

காதலி பிரிந்த கோவத்தில் அப்பாவி மக்களை கொலை செய்த காவலர்!

மூன்று மணி நேரத்தில், 22 அப்பாவி குழந்தைகள் உட்பட 36 பேர் கொல்லப்பட்டனர். கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கொன்ற குழந்தைகளில் பலர் இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள்.

கொலையாளி பன்யா என அடையாளம் காணப்பட்டுள்ளது. தகவல்களின்படி, கொலையாளி பன்யா, போதைப்பொருள் உட்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் பன்யா வழக்கில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரது காதலி அவரை விட்டு விலகுவதாக கூறிக்கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பன்யா இந்த கொலைகளை செய்ததாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய படுகொலையாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 22 அப்பாவிகள் உள்பட 36 பேர் பலியாகினர். அதே சமயம் காதலியிடம் தகராறு செய்து இவ்வளவு பெரிய சம்பவத்தை பன்யா செய்ததாக கூறுவதை போலீசார் ஏற்கவில்லை.

தாய்லாந்தின் துணை காவல்துறைத் தலைவர் ஜெனரல் சுர்சாட், பன்யாவின் பணிநீக்கம் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக கொலைகள் நடந்ததாக குற்றம் சாட்டினார். இதற்கிடையில், காவல்துறை சுறுசுறுப்பாக இருந்திருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் இவ்வளவு பெரிய சம்பவத்தை செய்திருக்க முடியாது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments