Wednesday, April 24, 2024
Homeஇந்திய செய்திகள்காதலன் வெளியிட்ட புகைப்படத்தால் இளம் பெண் விபரீத முடிவு!

காதலன் வெளியிட்ட புகைப்படத்தால் இளம் பெண் விபரீத முடிவு!

இந்தியாவில், தனது காதலன் தனியாக இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் 22 வயது ஆதிரா. இவர் அதே பகுதியை சேர்ந்த அருண் வித்யாதர் என்பவரை காதலித்து வந்தார்.

2 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் பல இடங்களுக்கு சென்று சேர்ந்து படம் எடுத்துக்கொண்டனர்.

சமீபத்தில் இருவரும் பிரிந்த பிறகு இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அருண் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆதிரா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆதிராவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments