சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (23), அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (20). தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் இன்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு, பரங்கிமலை ரயில் நிலையம் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன் தண்டவாளத்தில் சத்யாவை சதீஷ் தள்ளினார்.
இதில் சத்யா ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சதீஷ் சத்யாவை 6 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், சதீஷின் செயல்கள் பிடிக்காமல் சத்யா அவருடன் பழகுவதை நிறுத்தியதால் இந்த கொலை நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தப்பி ஓடிய சதீஷை, ரயில்வே போலீசார் சார்பில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை கமிஷனர் தலைமையில் 3 தனிப்படைகளும் தேடி வருகின்றனர்.