தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட நடிகை ரம்பா . தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வெற்றி நாயகி ஆனார்.
மார்க்கெட் சரிந்த பிறகு டிவி ஷோக்களில் பங்கேற்க ஆரம்பித்தார்.
மனட மைலாடா என்ற நடன நிகழ்ச்சியில் பல சீசன்களில் நடுவராக இருந்துள்ளார். பின்னர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் குடியேறினார்.
இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
நேற்று நடிகை ரம்பா தனது மகள்களை பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் கார் விபத்தில் சிக்கினார். அவரது மகள் ஷாஜா மட்டும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவலை நடிகை ரம்பாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.