Wednesday, April 24, 2024
Homeஉலக செய்திகள்கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய யாழ். குடும்பத்தினர் ; உயிருக்கு போராடும் தாயார்!

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய யாழ். குடும்பத்தினர் ; உயிருக்கு போராடும் தாயார்!

யாழ்ப்பாணம் இணுவிலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் சேர்ந்த கனடாவில் பரிதாபமாக விபத்தில் சிக்கியுள்ளனர்.

புதன்கிழமை பிற்பகல் விபத்தில் மகனும் மகளும் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் தாயார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து கடந்த புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரவூர்தி ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

52 வயதான பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் இந்த விபத்தில் 21 வயதுடைய மகனும் 23 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 46 வயதான டிரக் சாரதிக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான சாட்சிகளை தேடி வருவதாகவும், சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல் தெரிந்த எவரும் யோர்க் பிராந்திய காவல்துறையின் முக்கிய புலனாய்வுப் பிரிவை 1-866-876-5423, நோவா என்ற எண்ணில் அழைக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments