Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்கதிர்காமம் கங்கையில் நீராட சென்ற வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி!

கதிர்காமம் கங்கையில் நீராட சென்ற வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி!

நேற்று (19.10.2022) கதிர்காமம் – தம்பே வீதியில் மாணிக்க கங்கைக்கு அருகில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார்.

பொலிஸ் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மாணிக்க கங்கையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெபரேவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments