விசுவமடுப் பகுதியில் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட விசுவமடு பகுதியில் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வானது விசுவமடு தொட்டியடி பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட அமைவிடத்தில் இடம்பெற்றது.
இதன் போது மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது,அத்துடன் மலர் அஞ்சலி செலுத்தி,சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.