Friday, March 29, 2024
Homeகாணொளிகணவரை எப்படி கொள்ளவேண்டும் என்று சீரியலை பார்த்து பிளான் போட்ட மனைவி ! விசாரணையில் வெளிவந்த...

கணவரை எப்படி கொள்ளவேண்டும் என்று சீரியலை பார்த்து பிளான் போட்ட மனைவி ! விசாரணையில் வெளிவந்த உண்மை…

கணவரை கொலை செய்ய நிறைய கிரைம் சீரியல்களை பார்த்து வந்திருக்கிறார் மனைவி. சொத்துக்காக கிரைம் சீரியல்களை பார்த்து அதன்படி கணவரை கொலை செய்திருக்கிறார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்யாணப்பூர் சிவ்லி என்கிற பகுதியைச் சேர்ந்த ரிஷப். இவர் தனது மனைவி சப்னாவுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தனது நண்பர் மனீஷுடன் சகர்பூர் கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை தாக்கி இருக்கிறார்கள். இந்த பலத்த தாக்குதலில் காயம் அடைந்த அவர் ஸ்வரூப் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். டிசம்பர் 1ஆம் தேதி அன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார். டிசம்பர் 3ஆம் தேதி உடல்நிலை மீண்டும் மோசம் அடைந்ததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.இதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தாக்குதல் நடந்த நாளில் அந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமான செல்போன் எண்கள் செயல்பட்டு உள்ளன என்பது தெரிய வந்திருக்கிறது. விசாரணையில் அந்த செல்போன் எண்கள் ராஜு என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்திருக்கிறது. ராஜீவின் அழைப்பு விவரங்களை பார்த்த போது அவர் ரிசபின் மனைவி சப்னா உடன் அதிகம் பேசி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதனால் போலீசாருக்கு சப்னா மீது சந்தேகம் இருந்திருக்கிறது. இதன் பின்னர் எல்லோரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர் போலீசார். அப்போது ராஜு, சப்னா , சிட்டு ஆகியோர் ரிசபை கொலை செய்யும் திட்டமிட்டது அம்பலமாகி இருக்கிறது .

தாக்குதலுக்கு பின்னர் ராஜு சப்னாவுக்கு, வேலை முடிந்தது என்று மெசேஜ் அனுப்பி இருக்கிறார். ஆனாலும் ரிசப் உயிர் பிழைத்து விட்டதால் எல்லோரும் அவருக்கு அதிக மருந்துகளை கொடுத்து ரிசப்பை மிகவும் அதிகமாக நோய்வாய் படுத்தி கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்திருக்கிறது. ஏன் இப்படி கொலை செய்கிறீர்கள் என்று சப்னாவிடம் விசாரித்த போது, ஏராளமான சொத்துக்கள் இருக்கிறது. அதை அபகரிப்பதற்காகத்தான் திட்டம் போட்டு கணவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்த கொலையை செய்வதற்காக நிறைய க்ரைம் சீரியல்கள் பார்த்து வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் சப்னா தெரிவித்திருக்கிறார். இதை அடுத்து மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments