Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்கணவன் தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி ! வைத்தியசாலையில் மனைவியை பார்க்க வந்த கணவனுக்கு கத்தி...

கணவன் தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி ! வைத்தியசாலையில் மனைவியை பார்க்க வந்த கணவனுக்கு கத்தி குத்து!

குடும்பத் தகராறில் கணவனால் தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரை பார்க்க சென்ற கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பாணத்துறை தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியின் மூத்த சகோதரர் (மைத்துனர்) கத்தரிக்கோலால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வயிறு மற்றும் முதுகில் நான்கு இடங்களில் காயம் அடைந்த நபர் பாணந்துறை ஆதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தப்பியோடிய சந்தேகநபர் தனது மைத்துனரை தாக்குவதற்கு வைத்தியசாலை கத்தரிக்கோல் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments