Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்கணவனுக்கு லொட்டரியில் கிடைத்த ஆறு கோடி பணத்துடன் காதலனுடன் மனைவி தப்பியோட்டம்; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

கணவனுக்கு லொட்டரியில் கிடைத்த ஆறு கோடி பணத்துடன் காதலனுடன் மனைவி தப்பியோட்டம்; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

அதிர்ஷ்ட லாட்டரியில் கணவனுக்கு கிடைத்த ஆறு கோடி பணத்தை சுருட்டிக்கொண்டு காதலனுடன் மனைவி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் இசான் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் 49 வயதான மனிட், நவம்பர் 1 ஆம் தேதி 6 மில்லியன் பாட் மதிப்புள்ள லாட்டரியை வென்றார். வரி விலக்குக்குப் பிறகு அவர் தனது வங்கிக் கணக்கில் 5,970,000 பாட்களைப் பெற்றார். இது இலங்கை நாணயத்தில் சுமார் 6 கோடி ரூபாயாகும்.

பின்னர் மனைவியை நம்பி வெற்றி பெற்ற தொகையை மனைவியின் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். ஆனால் அவரது 45 வயது மனைவி அங்கனரத் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு காதலனுடன் ஓடிவிட்டார்.

திருமணமாகி 26 வருடங்கள் ஆன இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தம்பதியிடையே தகராறு எதுவும் இல்லை என அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்தனர்.

உறவினராக வந்த காதலன் லாட்டரியை வென்றதையடுத்து, தங்கள் மகிழ்ச்சியின் அடையாளமாக ஒரு கோவிலுக்கு 1 மில்லியன் பாட் நன்கொடை அளித்தனர். அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அப்போது, ​​தனது மனைவியின் உறவினரான ஒரு அந்நியரை விழாவில் சந்தித்ததாக மனித் கூறுகிறார்.

ஆனால் பின்னர் அவர் தனது மனைவியின் காதலன் என்பதையும், அவருடன் தான் தனது மனைவி பணத்துடன் தப்பிச் சென்றதையும் உணர்ந்தார். மனைவியிடமிருந்து இப்படி ஒரு ஏமாற்றத்தை எதிர்பார்க்காத அவர், மனைவி, பணம் இரண்டையும் இழந்து வருந்துகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments