Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காயங்களுக்குள்ளகிய நிலையில் கொம்பன் யானையொன்று மீட்பு!

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காயங்களுக்குள்ளகிய நிலையில் கொம்பன் யானையொன்று மீட்பு!

புத்தளம் எலுவாங்குளம் கங்கைவாடி பகுதியில் காயங்களுக்குள்ளகிய நிலையில் கொம்பன் யானையொன்று காணப்படுவதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்று காயங்களுக்குள்ளான கொம்பன் யானையை தேடும் முயற்சியில் ஈடுபட்டு நேற்று மாலை கண்டுபிடித்துள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள வலைய உதவிப் பொருப்பதிகாரி எம்.பி.எல்.எஸ் மாரசிங்ஹ தெரிவித்தார்.

இந்த நிலையில் விலங்குளை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் கொம்பன் யானையின் காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள வலைய உதவிப் பொருப்பதிகாரி எம்.பி.எல்.எஸ் மாரசிங்ஹ தெரிவித்தார்.

குறித்த கொம்பன் யானைக்கு மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments