Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்கடைக்குள் நுழைந்து பெண்ணை தாக்கிவிட்டு கொள்ளை!

கடைக்குள் நுழைந்து பெண்ணை தாக்கிவிட்டு கொள்ளை!

மஹரகமவில் உள்ள கடையொன்றில் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த நால்வர், கடையின் உரிமையாளரைத் தாக்கி அவர் அணிந்திருந்த தங்க நகையையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட பெண் காயமடைந்து கடைக்குள் மயங்கி விழுந்ததையடுத்து, அவர் அணிந்திருந்த தங்க நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு ஓடியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுவர்கள் வந்ததாக கூறப்படும் முச்சக்கரவண்டியின் இலக்கம் மற்றும் நிறம் குறித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments