அதிமுக தலைமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே காரசார விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. இந்நிலையில் கம்பம் பகுதியில் அதிமுக பிரமுகர்கள் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
பெரியகுளம் – தேனி சாலையில் உள்ள மதுராபுரி பிரிவில் கரகாட்டம், தேவராட்டம், செண்டை மேளம், முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பூர்ணகும்ப மரியாதை வழங்கினர்.
எடப்பாடி பழனிசாமிக்கு, அவரது ஆதரவாளர்கள் தங்க வேல் பரிசாக வழங்கினர். அங்கு சிறிதுநேரம் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ஏழைகள் இல்லாத தமிழ்நாட்டை எம்.ஜி.ஆர்.., ஜெயலலிதா வழியில் அனைவரும் ஒருங்கிணைந்து உருவாக்குவோம் என்றார்.