Thursday, April 25, 2024
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்ஐஸ் போதையில் சிக்கிய 2 வயதுப் பெண் குழந்தை - யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதையில் சிக்கிய 2 வயதுப் பெண் குழந்தை – யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் என்ற கொடிய போதைப்பொருளுக்கு தந்தை அடிமையானதால் 2 வயது சிறுமி ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முல்லைத்தீவு கோக்லா பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவரது உடலில் ஐஸ் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.

மேலும், குழந்தையின் தந்தை ஐஸ் என்ற கொடிய போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தை விளையாட்டாக வீட்டில் இருந்து போதைப்பொருளை உட்கொண்டிருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments