Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்எல்லை தாண்டி மீன் பிடித்த மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்த மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த 3 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நேற்று (19.10.2022) மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடி படகை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கப்பலில் இருந்த மூன்று இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments