Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்எரிபொருள் பௌசர் விபத்து: சாரதி உயிரிழப்பு!

எரிபொருள் பௌசர் விபத்து: சாரதி உயிரிழப்பு!

எரிபொருள் பௌசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் புஸல்லாவை- எல்பொட தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.பி. துசிந்த (வயது – 43) என்பவர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புஸ்ஸலாவ எல்பொட தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு 6600 லீற்றர் டீசலை விநியோகித்துவிட்டு கம்பாலாவுக்குத் திரும்பிய திருகோணமலையிலிருந்து கம்பாலா நோக்கிச் செல்லும் வழியில் அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பௌசரில் எஞ்சியிருந்த டீசல் கசிந்து பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பவுசருக்குள் சாரதியும் உதவியாளரும் இருந்துள்ளனர். இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் புசல்லா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை மற்றும் வீதி வழுக்கும் தன்மையினால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த பவுசரில் 13200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ – பர்டோப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments