Friday, March 29, 2024
Homeஅரசியல்செய்திஈரோடு இடைத்தேர்தல் - அதிமுக போட்டியிடும் என ஜி.கே வாசன் அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தல் – அதிமுக போட்டியிடும் என ஜி.கே வாசன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் அந்த தொகுதியில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என அதிமுகவின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு அதிமுக போட்டியிட ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் நேற்று நடத்திய பேச்சுவார்த்க்தையை தொடர்ந்து ஜி.கே வாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ்ஸின் கையெழுத்து இல்லாமல் அதிமுகவின் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் உள்ளதால், இந்த இடைத்தேர்தல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments