Friday, April 19, 2024
Homeஅரசியல்செய்திஈரோடு இடைத்தேர்தலில் யார் போட்டி? கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்த பிறகு ஜி.கே வாசன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் யார் போட்டி? கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்த பிறகு ஜி.கே வாசன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அதிமுகவுடனான ஆலோசனைக்கு பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. தற்போது நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவித்தபோதே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜனவரி 31 வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மார்ச் 02 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் யார் வேட்பாளராக களமிறங்குவார்கள் என்ற கேள்வி அரசியல் தளத்தில் கேள்வியாக எழுந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments