இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Yury Materiy இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் பற்றி கூறியுள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ரஷ்ய ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“எங்கள் மக்களின் நலன்களுக்காகவும், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நலனுக்காகவும் பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு அரச தலைவர் என்ற முறையில் உங்களது செயல்பாடுகளை நான் எதிர்பார்க்கிறேன்” என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேலும் கூறினார். கடிதம்