இலங்கை வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஏப்ரல் 15ம் தேதிக்கு முன் போதிய நிலக்கரி இருப்பு இல்லையெனில் இந்த நிலை ஏற்படும் என்றும் சங்கம் கூறியுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பாரிய மின்வெட்டு ஏற்படும் என சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.