Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானை ! மாணவர்கள் வெளியேற்றம் !

இலங்கையில் பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானை ! மாணவர்கள் வெளியேற்றம் !

திருமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி – பெரியகுளம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால், அந்த பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர்களும் பலமுறை சேதமடைந்துள்ளன. இந்த காட்டு யானையின் தொடர்ச்சியான அட்டகாசத்தினால் நிம்மதியாக உறங்க முடியாமல் தவிப்பதாகவும், அச்சத்துடன் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கின்றனர். கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை மேட்டு நிலப் பயிர்களை நாசம் செய்து விட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த காட்டு யானையை தொடர் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments