Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் ஒரே நாளில் ரயிலில் பயணித்த 124 பேர் அதிரடியாக கைது ! வெளியான காரணம்...

இலங்கையில் ஒரே நாளில் ரயிலில் பயணித்த 124 பேர் அதிரடியாக கைது ! வெளியான காரணம் !

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை இடம்பெற்ற விசேட பயணச்சீட்டு பரிசோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை புகையிரத நிலைய ஊழியர்கள் இணைந்து இந்த விசேட பரிசோதனையை மேற்கொண்டதாக புகையிரத வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 78 பேர் அபராதத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட அபராதத் தொகை இரண்டு லட்சத்து 38,770 ரூபாய்.

மேலும் 46 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து செலுத்த வேண்டிய அபராதத் தொகை 39,840 ரூபா எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிக்கட் இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடம் இருந்து வசூலிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 லட்சத்து 78,610 ரூபா என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments