Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பில் இளம் வயதினரிடையே ஆபத்தான இரசாயன பாலுறவு அதிகரித்து வருவதாக பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ரசாஞ்சலி ஹெட்டி ஆராச்சி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எச்.ஐ.வி தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இளைஞர்கள் தற்போது இரசாயன பாலுறவுக்கான புதிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

மதுபானம் மற்றும் சில போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், இரசாயன பாலுறவு தற்போது இலங்கையில் பிரபலமடைந்துள்ளதுடன், பாலுறவு நோய்களின் அபாயமும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments