Friday, April 19, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் இன்றைய மின்வெட்டு நேரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையில் இன்றைய மின்வெட்டு நேரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையில் இன்றைய தினம் (29-10-2022) சனிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1 மணித்தியாலம் மின்வெட்டு அமல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T, U ,V, W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்மைக்காலமாக 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்பட்ட நிலையில், கடந்த நாட்களில் 2 மணித்தியாலங்களாக மின்வெட்டு நேரம் மாற்றப்பட்டது.

இந்த நிலையில், நாளைய தினம் ஒரு மணித்தியலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments