Tuesday, April 23, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொலைசெய்த பொலிஸார்!

இலங்கையில் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொலைசெய்த பொலிஸார்!

முல்லேரியா மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் காரணமின்றி இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இருவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என பொலிஸ் விசாரணைக் குழுக்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவ்வாறான தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைகள் தொடர்பிலான விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கில் அதிரடிப்படையினரால் இவ்வாறான தவறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதாள உலக ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசாரணைக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments