Tuesday, March 19, 2024
Homeசினிமாஇலங்கைக்கு வருகை தரும் சூர்யா : இலங்கை ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!

இலங்கைக்கு வருகை தரும் சூர்யா : இலங்கை ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!

தமிழகத்தின் முன்னணி நடிகர் சூரியா நடிக்கும் 42வது படத்தின் படப்பிடிப்பும் இலங்கையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே கோவா, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை காடுகளிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதற்கான ஆய்வுக் குழு விரைவில் இலங்கை வரவுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கதையைக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் 2023 இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே ஐரோப்பாவில் பல்கேரியா, செர்பியா ஆகிய இரு நாடுகளை படக்குழு தேர்வு செய்துள்ள நிலையில், கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, பிஜி ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்த தயாராகி வருகிறது.

இருப்பினும், படப்பிடிப்புக்கு மூன்று நாடுகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும்.

இப்படம் சூர்யாவின் அதிக பட்ஜெட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சூர்யா 5 விதமான கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படம் 10 மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments