Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்இரு பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திய கொள்ளையர்கள் : கதறும் குடும்பம்!

இரு பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திய கொள்ளையர்கள் : கதறும் குடும்பம்!

வத்தளை உள்ள பகுதி ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொள்ளையர்களின் கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் வத்தளை, ஹெந்தளை அட்டம்பலவத்தை பகுதியில் நேற்று முன்தினம் (03-08-2022) இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அட்டம்பலவத்தை பகுதியில் அமைந்துள்ள லங்கா பிலாஸ்டிக் தொழிற்சாலையில் களஞ்சிய காப்பாளராக கடமையாற்றும் இந்த குடும்பஸ்தர் தனது மோட்டார் சைக்கி ளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு தொழிற் சாலை நோக்கி வந்துள்ளார்.

இதன்போது அட்டம்பலவத்தை பகுதியில் அவரை வழி மறித்த இரு கொள்ளையர்கள் அவரிடமிருந்த கைத்தொலைபேசி உட்பட பொருட் களை அபகரிக்க முயன்றுள்ளனர்.

இதனை தடுப்பதற்கு குடும்பஸ்தர் முயன்றபோது கொள்ளையர்கள் இவர்மீது கத்தி க்குத்து தாக்குதலை நடத்திவிட்டு அவரது கைதொலைபேசியையும் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இரு பிள்ளைகளின் தந்தை சசிகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அட்டம்பலவத்தை பகுதியில் கடந்த பல மாதங்களாக இத்தகைய கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments