Thursday, April 18, 2024
Homeஇலங்கை செய்திகள்இரண்டு சடலங்களுடன் காலி துறைமுகத்திற்கு வந்த சுவிஸ் கப்பல்.

இரண்டு சடலங்களுடன் காலி துறைமுகத்திற்கு வந்த சுவிஸ் கப்பல்.

சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா வரை சர்வதேச கடற்பகுதியில் பயணித்த சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இரண்டு உக்ரைன் நாட்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.

52 வயது மற்றும் 40 வயதுடைய இரண்டு உக்ரைன் கடற்படையினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன் உயிரிழந்த இருவரின் சடலங்களை ஏற்றிய கப்பல் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த இரண்டு கடற்படையினரும் நேற்று முன்தினம் இரவு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை நீதவான் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments