பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. டிரிப்தா மற்றும் ஷ்ரவாஸ் என்ற இரட்டையர்கள் பிறந்ததை இன்ஸ்டாகிராமில் சின்மயி அறிவித்திருந்தார்.
சின்மயிக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. “எனது தனிப்பட்ட வாழ்க்கை, எனது குடும்பம் மற்றும் எனது நண்பர்கள் வட்டத்தில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். எங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள் நீண்ட காலமாக சமூக வலைதளங்களில் இருக்காது. எனது இரட்டையர்களின் சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது நான் ஒரு பஜன் பாடினேன்” என்று சின்மயி கூறினார்.
இந்நிலையில், சின்மயி தனது நான்கு மாத மகன் மற்றும் மகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அவர் அதை “உலகின் சிறந்த விஷயம்” என்று தலைப்பிட்டார். பல ரசிகர்கள் படத்திற்கு தங்களின் காதலை வெளிப்படுத்தினர்