பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூரில் உள்ள குஜ்ரன்வாலா நகரில் உள்ள பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் அமைப்பின் வரவேற்பு முகாமில் இம்ரான் கான் துப்பாக்கியால் சுட்டதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் கட்சியைச் சேர்ந்த சிலர் காயம் அடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சிந்து மாகாணத்தின் முன்னாள் கவர்னர் பைசல் ஜாவேத் என்பவரும் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இம்ரான் கானை கொல்லும் நோக்கில் துப்பாக்கியை பிரயோகித்ததாக கூறப்படும் நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.