இலங்கையில் இருந்து இன்று காலை 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்த வகையில் இன்று காலை 10 பேர் தமிழகத்தின் தனுஸ்கோடிக்கு வந்துள்ளனர்.
சென்றவர்களில் 5 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவைச் சேர்ந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 பேர் தனுஸ்கோடியை வந்தடைந்துள்ளனர்.