Saturday, April 20, 2024
Homeஉலக செய்திகள்இந்தோனேசியாவில் இருமல் மருந்துகளை சாப்பிட்ட 100 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் இருமல் மருந்துகளை சாப்பிட்ட 100 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் இருமல் மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

காம்பியாவில் திரவ வடிவிலான இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியானது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தோனேசிய நாட்டில் அனைத்து விதமான திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்தோனேசிய அரசாங்கம் கூறுகையில்,

“திரவ வடிவிலான சில மருந்துகளில் கடுமையான சிறுநீரக காயத்தை ஏற்படுத்துகிற (நச்சு) பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டில் 99 இளம் குழந்தைகள் இறந்துள்ளன” என தெரிவித்தது.

இந்தோனேசிய சுகாதார மந்திரி புதி குணாதி சாதிகின் கூறுகையில்,

” 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சிறுநீரக காயம் ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு தரப்பட்ட மருந்துகளில (நச்சுத்தன்மை கொண்ட) டைதிலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது” என தெரிவித்தார்.

இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையா என்பது குறித்து தகவல் இல்லை என கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments