Thursday, March 28, 2024
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்இந்தியாவிற்கு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள்!

இந்தியாவிற்கு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள்!

கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இன்று (24-11-2022) அதிகாலை தமிழகத்தின் தனுஷ்கோடி கடற்பகுதியை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மண்டபத்தில் உள்ள சிறப்பு முகாமில் முகாமிட்டுள்ள இலங்கை பொருளாதார அகதிகளின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது.

இவர்கள் தவிர இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் வயது மூப்பு காரணமாக மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் தமிழக கடல் பகுதியை வந்தடைந்த இலங்கை அகதிகள் காலை 8 மணியளவில் மண்டபத்தில் பொலிஸாரால் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் நேற்றைய தினம் மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதாக ஐவரைக் கொண்ட இந்தக் குடும்பத் தலைவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments