Tuesday, March 19, 2024
Homeஇந்திய செய்திகள்‘ஆபாச’ பாதிரியாரின் அடுத்தடுத்த லீலைகள் – அனுபவித்த பின் வேறு ஒருவருடன் திருமணம்

‘ஆபாச’ பாதிரியாரின் அடுத்தடுத்த லீலைகள் – அனுபவித்த பின் வேறு ஒருவருடன் திருமணம்

பெண்ணை பாலியல் ரீதியாக அனுபவித்த பின் அவருக்கு வேறு ஒருவருடன் பாதிரியார் பெனடிக் ஆன்றோ தகவல் வெளியாகியுள்ளது. பாதிரியாரை கைது செய்ய இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக். கேரளாவில் உள்ள மலங்காலா கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக, பேச்சிப்பாறை, அஜயமண்டபம் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பணிபுரிந்துள்ளார். இங்கு வரும் பெண்களை மயக்கி நிர்வாண புகைப்படம் எடுத்து லேப்டாப்பில் பதிவு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்கச் சென்ற பலர் அவரைத் தாக்கி, மடிக்கணினியைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, பாதிரியார் மற்றும் சிறுமியின் ஆபாச புகைப்படங்கள் வெளியாகின.

சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, பெங்களூரு நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் மீது ஆன்லைனில் புகார் அளித்தார். அதில், பாதிரியார் தன்னை விரும்பாத இடத்தில் தொட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியதாகவும் கூறியுள்ளார். சைபர் கிரைம் காவல்துறை தற்போது இந்த புகாரின் பேரில் ஐந்து பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்துள்ளது.

பாதிரியாரை கைது செய்ய ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் பாதிரியாருடன் நிர்வாணமாக உள்ள ஒரு பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணத்தையும் அவரே நடத்தி வைத்துள்ளார். அந்த பெண்ணின் படங்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று பெண்ணின் உறவினர்கள் எஸ்.பி.யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிரியாரிடம் ஏமாந்த பெண்கள், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் செய்யலாம், அவர்களது விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது பாதிரியாரிடம் இருந்து எடுக்கப்பட்ட லேப்டாப்பை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் புகைப்படங்கள் தங்களிடம் இருப்பதாகவும், விவரங்களை சேகரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments