Thursday, March 28, 2024
Homeஇலங்கை செய்திகள்ஆட்டுகுட்டியை தனது காணிக்குள் அனுப்பவேண்டாம் என கூறிய காணி உரிமையாளரை மண்வெட்டியால் தாக்கிய ஆட்டின் உரிமையாளர்!

ஆட்டுகுட்டியை தனது காணிக்குள் அனுப்பவேண்டாம் என கூறிய காணி உரிமையாளரை மண்வெட்டியால் தாக்கிய ஆட்டின் உரிமையாளர்!

ஒருவர் மற்றொருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நொச்சிக்குளம் சாந்திபுரத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வேலாயுதம் ராஜேந்திரன் என்பவரே தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், தாக்குதலுக்கு இலக்காகி கை உடைந்த நிலையில் மஹதிவுல்வெவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போது அங்கு கிடைத்த எக்ஸ்ரே பரிசோதனையின் அடிப்படையில் குறித்த நபரின் கை முறிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. .

மண்வெட்டியால் தாக்கிய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments