Tuesday, April 23, 2024
Homeஇலங்கை செய்திகள்அவுஸ்திரேலியாவுக்கு சட்விரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த 19 பேர் கைது !

அவுஸ்திரேலியாவுக்கு சட்விரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த 19 பேர் கைது !

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்கு தயாரான சந்தேகத்தின் பேரில் 19 பேரை சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை சம்பூர் கொக்கட்டி கடற்கரையில் வைத்து நேற்று திங்கட்கிழமை காலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 19 சந்தேக நபர்களில் 10 ஆண்கள், 03 பெண்கள் மற்றும் 06 சிறுவர்கள் அடங்குகின்றனர்.

இவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சம்பூர் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தி மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments