Wednesday, April 24, 2024
Homeஇலங்கை செய்திகள்அரச ஊழியர்களுக்கு கிடைக்க போகும் வாய்ப்பு..! வெளியான முக்கிய அறிவிப்பு !

அரச ஊழியர்களுக்கு கிடைக்க போகும் வாய்ப்பு..! வெளியான முக்கிய அறிவிப்பு !

போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அரச உத்தியோகத்தர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு அருகாமையில் கடமையாற்றக்கூடிய அலுவலகங்களுக்கு இடமாற்றம் வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

இதன் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு இடமாறுதல் வழங்கும் திட்டம் உருவாக்கப்படும்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் பிரதம பொருளாதார ஆலோசகர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

கடன் வட்டி அதிகரிப்பு, போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பு போன்ற காரணங்களால் அதிகப் பணத்தைச் செலவழித்தும், பேருந்துகளில் கடமைக்குச் சென்று வருவதற்கும் இயலாமல் அரச ஊழியர்கள் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களை வீட்டிற்கு அருகில் உள்ள அரசு அலுவலகத்திற்கு மாற்றும் திட்டம் விரைவில் உருவாக்கப்படும்.

அதனை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் சமரதுங்கவுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியதாகவும் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments