அரச ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, பதவிநிலை அதிகாரிகளுக்கு அன்றைய தினமே மாத சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தபால் நிலைய அதிகாரிகளுக்கு சில நாட்களுக்குப் பின்னர் சம்பளம் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் முதல் அடுத்த சில மாதங்களுக்கு அரசாங்க செலவினங்களை நிர்வகிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திறைசேரியால் முன்னெடுக்கப்படும் நடைமுறைகள் தொடர்பில் நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.