Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்அரசியலவாதி வீட்டில் உள்ள நீர் தடாகத்தில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்!

அரசியலவாதி வீட்டில் உள்ள நீர் தடாகத்தில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்!

கம்பஹா பிரதேசத்தில் ஆளும் கட்சியின் மூத்த அரசியல்வாதி ஒருவரின் உறவினர் ஒருவரின் நீச்சல் தடாகத்தில் இருந்து 17 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா – மொக்கா தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதி ஒருவர் அண்மையில் கம்பஹா நாய்வல வீதி – உடுகம்பளை பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதி ஒருவரின் உறவினர் வீட்டுக்கு வீடு வீடாகச் சென்று வியாபாரம் செய்யச் சென்றுள்ளார்.

இதேவேளை, சிறுமி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்ததாகவும், நீச்சல் குளத்தில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நீச்சல் குளத்தை சுத்தம் செய்வதற்காக கீழே இறங்கிய போது அவர் நீரில் மூழ்கியது சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையில் சிறுமி நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கம்பஹா மற்றும் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments