Thursday, March 28, 2024
Homeஇலங்கை செய்திகள்அரசாங்க ஊழியர்கள் பணி நாட்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசாங்க ஊழியர்கள் பணி நாட்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசாங்க ஊழியர்களை வாரத்தில் 5 நாட்கள் பணிக்கு அழைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்க ஊழியர்களை அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்கு தணிக்கப்பட்டு, பொது சேவைகள் இயங்கி வருவதால், நாள்தோறும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் வழமை போன்று அரசாங்க அலுவலகங்களுக்கு வந்து செல்வதாக கூறப்படுகின்றது.

இதன்படி, அரசாங்க அலுவலகங்களின் பணிகளை வழமை போன்று நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக , அரசாங்க ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்கள் பணிக்கு அழைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டத்திலான கடமை தேவைகளை கருத்தில் கொண்டு வாரத்தின் ஐந்து நாட்களும் அரசாங்க உத்தியோகத்தர்களை அழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments