Friday, September 22, 2023
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்முல்லைத்தீவில் விபத்து:கர்ப்பிணி பெண்ணுடன் சென்ற குடும்பஸ்தர் படுகாயம் !

முல்லைத்தீவில் விபத்து:கர்ப்பிணி பெண்ணுடன் சென்ற குடும்பஸ்தர் படுகாயம் !

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால், கர்ப்பிணி பெண்ணுடன் பயணித்த உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று(24.10.22) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் கர்ப்பிணி பெண் மேலதி சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியினை சேர்ந்த 21 வயதுடைய குடும்பஸ்தர் தனது மனைவியான கர்ப்பிணி பெண்ணினை உந்துருளியில் ஏற்றி சென்ற வேளை சொகுசு வாகனத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த குடும்பஸ்தர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட முள்ளியவளை பொலிஸார் வாகன சாரதியினை கைதுசெய்துள்ளதுடன் வாகனத்தினையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments