Friday, September 22, 2023
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்முல்லைத்தீவில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட நகைகள் அல்லது ஆயுதங்கள் இருக்கலாம் என திடீர் அகழ்வுப் பணி...

முல்லைத்தீவில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட நகைகள் அல்லது ஆயுதங்கள் இருக்கலாம் என திடீர் அகழ்வுப் பணி ஆரம்பம்!

புலிகளால் புதைக்கப்பட்ட நகைகள் அல்லது ஆயுதங்கள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுவதால், தேவிபுரம் “ஏ” பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் பொருட்களை புதைத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஆர்.சரவணராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அகழ்வுப் பணியில் காவல்துறை, சிறப்பு அதிரடிப் படையினர், கிராம அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments