Saturday, September 30, 2023
Homeஇலங்கை செய்திகள்மீண்டும் அதிகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலை!

மீண்டும் அதிகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலை!

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (6) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, விலை சூத்திரத்தின் பிரகாரம், லிட்ரோ எரிவாயுவின் விலை 210 – 250 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் திரு.பீரிஸ் குறிப்பிட்டார்.

மேலும், எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என்ற செய்தியை அடுத்து, வர்த்தகர்கள் எரிவாயு பதிவு செய்வதை தவிர்த்துள்ளதாகவும், இதன் காரணமாக சில இடங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments