Thursday, September 28, 2023
Homeஇலங்கை செய்திகள்நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் ! பொலிஸார் தீவிர விசாரணை !

நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் ! பொலிஸார் தீவிர விசாரணை !

நிர்வாண நிலையில் யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள தொடருந்து பாதைக்கு அருகில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் களுத்துறை நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதி, பிறிதொரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் விடுதிக்கு சென்றதுடன் அவ் விடுதியில் இரு அறைகள் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

அதில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் விடுதியை விட்டு வெளியேறுவதாகவும் அதன் பின்னர் மற்றைய இளைஞரும் வெளியேறுவதாகவும் பொலிஸாரின் முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அத்தோடு சந்தேகத்தின் அடிப்படையில் அக் குழுவின் மற்றும் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டதோடு உயிரிழந்த யுவதியுடன் இருந்த இளைஞனை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது கொலையா தற்கொலையா என்ற விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments