Thursday, September 28, 2023
Homeஇலங்கை செய்திகள்குரங்குகளை மட்டுமல்ல மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் - பாலித ரங்கே பண்டார !

குரங்குகளை மட்டுமல்ல மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் – பாலித ரங்கே பண்டார !

சீனாவிற்கு குரங்குகளை மட்டுமல்ல முடிந்தால் மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் யோசனை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்த போது முடிந்தால் மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற யோசனையையும் இன்று முன்வைத்துள்ளார்.

புத்தாண்டு விழா ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரங்கே பண்டார, குரங்குகள் பயிர்களை நாசம் செய்வது மட்டுமன்றி மயில்களும் பயிர்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட குரங்குகளை ஏற்றுமதி செய்வதை எதிர்ப்பவர்கள் வனாதவில்லு, ஆனமடுவ, அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று, தோட்டங்களுக்கு இந்த குரங்குகள் மற்றும் மயில்களால் ஏற்படும் சேதங்களைப் பார்த்து, விவசாய சமூகம் அனுபவிக்கும் இழப்பைக் காண வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஏதாவது நல்லது செய்ய முடிவு செய்தால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்ப்பதற்கு அரக்கர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments