காதலியை கொன்றுவிட்டு காதலன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
கண்டி – பல்லேகல பொலிஸ் நிலையத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் பிலிமத்தலையைச் சேர்ந்த வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி சம்பவம் பல்லேகல பொலிஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.